இலங்கைக்கு நெருக்கடியில் இருந்து வெளிவர உதவுங்கள் – இந்திய காங்கிரஸ் கட்சி சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை

Date:

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் இலங்கைக்கு உதவ சர்வதேச ஆதரவு வழங்கப்பட வேண்டும் என இந்திய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்திய மத்திய அரசும் சர்வதேச சமூகமும் இலங்கைக்கு உதவ முன்வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தான் மிகவும் கவலையடைவதாகவும் அவர் கூறுகிறார்.

அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட இலங்கை மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் மிக விரைவில் முடிவுக்கு வந்து மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்பும் என்றும் இலங்கையர்களுக்கு மீண்டும் முன்பு போல் நிலைத்து நிற்கும் பலம் இருப்பதாகவும் நம்புவதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். .

இலங்கையர்கள் காங்கிரஸ் கட்சியிடமிருந்து அதிகபட்ச ஆதரவைப் பெறுவார்கள் என்றும், இந்திய மத்திய அரசு வழங்கும் சலுகைகளை அவர்கள் தொடர்ந்தும் பெறுவார்கள் என்றும் அவர் நம்புகிறார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...