இலங்கைக்கு நெருக்கடியில் இருந்து வெளிவர உதவுங்கள் – இந்திய காங்கிரஸ் கட்சி சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை

Date:

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் இலங்கைக்கு உதவ சர்வதேச ஆதரவு வழங்கப்பட வேண்டும் என இந்திய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்திய மத்திய அரசும் சர்வதேச சமூகமும் இலங்கைக்கு உதவ முன்வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தான் மிகவும் கவலையடைவதாகவும் அவர் கூறுகிறார்.

அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட இலங்கை மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் மிக விரைவில் முடிவுக்கு வந்து மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்பும் என்றும் இலங்கையர்களுக்கு மீண்டும் முன்பு போல் நிலைத்து நிற்கும் பலம் இருப்பதாகவும் நம்புவதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். .

இலங்கையர்கள் காங்கிரஸ் கட்சியிடமிருந்து அதிகபட்ச ஆதரவைப் பெறுவார்கள் என்றும், இந்திய மத்திய அரசு வழங்கும் சலுகைகளை அவர்கள் தொடர்ந்தும் பெறுவார்கள் என்றும் அவர் நம்புகிறார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அசோக ரன்வல விபத்தில் சிக்கினார்

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி,...

MV X-Press Pearl விபத்துக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏன் மறுக்கிறது?

மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை...

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...