பாதுகாப்பு தரப்பில் இருவர் பலி

0
209

பொல்துவ சந்தியில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்ட இராணுவ சிப்பாய் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று பிற்பகல் முதல் பாராளுமன்ற நுழைவு வீதியை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டிருந்த வேளையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஒன்றிணைந்து நிலைமையைக் கட்டுப்படுத்தியதால் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இராணுவ அதிகாரி ஒருவரை போராட்டக்காரர்கள் தாக்கியதாகவும், அவரது துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here