ராஜினாமா கடிதம் ஏன் தாமதமானது? காரணம் தெரிய வந்தது

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு மாலைதீவுக்குச் சென்று அங்கிருந்து முதலில் டுபாய் மாநிலத்திற்குச் செல்ல முயற்சித்தார்.

ஆனால் துபாய் மாநிலத்தில் பணிபுரியும் பெருமளவிலான இலங்கையர்களிடமிருந்து எதிர்ப்புக்கள் எழும் அபாயம் உள்ளதால் அவரது கோரிக்கையை டுபாய் அதிகாரிகள் நிராகரித்திருந்தனர்.

அதன் பின்னர், அவர் சிங்கப்பூர் செல்ல முயற்சித்ததாகவும், அதற்குத் தேவையான அனுமதியைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்த கணிசமான கால அவகாசம் கடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவுத் திணைக்களத்தால் ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குள் நுழைய மறுத்தால், குடிவரவுச் சட்டங்களின்படி, அந்த நபர் தனது குடியுரிமை உள்ள நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யும் போது அவருக்கு அப்படி ஏதாவது நடந்தால், அவர் ஒரு சாதாரண குடிமகனாக மீண்டும் இலங்கைக்கு வர வேண்டும். ஆனால் அவர் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால், அவர் திருப்பி அனுப்பப்பட்டாலும், அவர் மீண்டும் இலங்கைக்கு ஜனாதிபதியாக வரலாம்.

இந்த சட்ட மற்றும் தொழில்நுட்ப உண்மைகளின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் தாமதமானது.

அதன்படி அவர் சிங்கப்பூருக்குள் நுழைந்து அங்கு குடியேறிய பின்னர் தனது பதவி விலகலை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம்...

இஷாரா உட்பட ஐந்து பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...