சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கவனம் செலுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனஇதனை கூறினார்.
நாட்டின் சுகாதார அமைப்பு பலவீனமடைந்துள்ளமை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.