ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரப்பகிர்வு, காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் குறித்து அங்கு கலந்துரையாடப்பட உள்ளதாகவும், ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடந்த காலங்களிலும் ஜனாதிபதிக்கும் தமிழ் எம்.பி.க்களுக்கும் இடையில் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.