தரம் குறைந்த மருந்துகளை பயன்படுத்தி கொல்லும் அரசை விரட்டுவோம்! விலையை குறைக்கவும்! மருந்து உபகரண பற்றாக்குறையை தீர்க்கவும்! போன்ற கோஷங்களுடன் இன்று (17) பிற்பகல் கொழும்பு சுகாதார அமைச்சுக்கு முன்பாக எதிர்ப்புப் பிரச்சாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட ஒரு குழுவினர் ஒன்றிணைந்த போராட்டம் என பெயரிடப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


















