21 இந்தியர்கள் கைது

Date:

இணையவழி சூதாட்ட மோசடியில் ஈடுபட்ட 21 இந்திய பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வந்து, விசா காலாவதியான பின்னரும் கிருலப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்து இந்த மோசடியை மேற்கொண்டதாகத் தெரியவந்துள்ளது. 

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இடர் மதிப்பீட்டுப் பிரிவு அதிகாரிகள் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து இந்தக் குழுவைக் கண்டறிந்து கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகளை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக, வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...

எம்மை பயமுறுத்தி வாயடைக்க முடியாது

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுஜன பெரமுனையின்...

ஹெலிகாப்டர் கொள்வனவு செய்ய சிங்கப்பூர் சென்றுள்ள டட்லி

அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் கோடீஸ்வர தொழிலதிபர் டட்லி சிறிசேன ஹெலிகாப்டர் ஒன்றை...