பதுக்கி வைத்த கறுப்பு பணத்தை மீட்க புதிய சட்டம்

Date:

பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க பல்வேறு நாடுகளில் கணக்கு வைத்திருக்கும் அல்லது திட்டங்களில் முதலீடு செய்த அரசியல்வாதிகள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகள் குறித்து அரசுக்கு உறுதி செய்யப்படாத தகவல்கள் கிடைத்துள்ளன.

இது அரசியல்வாதிகளாலும் பாதாள உலகக் குற்றவாளிகளாலும் திருடப்பட்ட அல்லது வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்ட பணமாகும், மேலும் பணத்தை மீட்பதற்கும் பறிமுதல் செய்வதற்கும் புதிய சட்டத்தை உருவாக்க அரசாங்கம் நம்புகிறது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய சட்டத்தை உருவாக்கி 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக நீதி அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...