கனடாவில் அமைச்சராக பதவியேற்றார் இலங்கை தமிழர்!

Date:

Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி சுதேசி உறவுகளின் அமைச்சராக பதவியேற்றார்.

இதன்படி, ஈழத் தமிழர் ஒருவர் கனடிய வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சுப் பதவியை பெற்றுள்ளார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று குடியரசு – முதல் குடியினர் உடனான உறவுகள் அமைச்சராக பதவியேற்றுள்ள கௌரவ கேரி ஆனந்தசங்கரி அவர்களிற்கு கனேடிய தமிழர் பேரவை (CTC) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இவர் நீண்ட காலமாக மனித உரிமைகள் பிரச்சினைகளை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வாதிட்டு வருகிறார் என்பதோடு பல வருடங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட பல்வேறு மன்றங்களில் கனடிய தமிழர் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

இவர் முதன்முதலில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் வரை சட்ட ஆலோசகராகவும் செயற்பட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...