சுகாதார தொழிற் சங்கங்கள் பாரிய பணிப்புறக்கணிப்பு

Date:

எதிர்வரும் 3ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதைத் தடுப்பதன் மூலம் விதிக்கப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யாமைக்கு எதிராக இதுஸநடத்தப்படுவதாக அதன் தலைவர் ரவி குமுதேஷ் கூறினார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் இதுவரை சுற்றறிக்கைக்கு பதிலளிக்கவில்லை என ரவி குமுதேஷ் மேலும் குறிப்பிட்டார்.

இந்நாட்டின் சுகாதார சேவை தொடர்பில் சுகாதார நிபுணர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பல அம்பலங்களை வெளியிடும் விசேட மாநாடு எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

100,000 காண்டாக்ட் லென்ஸ்கள் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் முறைகேடு நடந்தமைக்காக சுகாதார அமைச்சின் செயலாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கக் கூட்டணியின் தலைவர் டாக்டர் ஜி. ஜி. சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...