25 ஆண்டுகள் தேவையில்லை, மூன்றே ஆண்டுகளில் நாட்டை கட்டியெழுப்புவேன் – சம்பிக்க சபதம்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுப்படி நாடு 2048 இல் அபிவிருத்தி அடையும் என்றும் அதுவரை 25 வருடங்கள் மக்கள் துன்பப்பட முடியாது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஆனால் தாம் தலைமையிலான குழுவினரால் நாட்டின் 03 அடிப்படைப் பிரச்சினைகளை மூன்று வருடங்களுக்குள் தீர்க்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.

திருட்டை நிறுத்தி அரசாங்க வினைத்திறனை உருவாக்குவது இன்றியமையாதது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

திருட்டை நிறுத்துவதற்கும் நாட்டை வளப்படுத்துவதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் ஒரு நாட்டின் தலைவர்களாக இருக்க முடியாது என எம்.பி. கூறினார்.

அதன்படி, மருத்துவம் மற்றும் மருத்துவமனை சேவை, உணவுப் பிரச்னை, எரிசக்தி, போக்குவரத்து, மின்சாரம் ஆகிய பிரச்னைகள் மூன்றாண்டுகளில் தீர்க்கப்படும் என்கிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...