மாவட்ட தலைமை பதவிகளுக்கு புதிய நியமனம்: பொதுஜன பெரமுன அதிரடி

Date:

மாவட்ட தலைமை பதவிகளுக்கு புதிய தற்காலிக நியமனங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

அநுராதபுரம் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா மாவட்ட தலைவராக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்களில் கம்பஹாவும் ஒன்று, இந்த நியமனம் கட்சிக்கு மிகவும் முக்கியமானதாகும்.

காலி மாவட்ட தலைவராக இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன் மாத்தறை மாவட்டத்தின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்காது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க முன்னைய மாவட்ட தலைவர்கள் எடுத்த தீர்மானத்தை தொடர்ந்து இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

மீண்டும் காலநிலை மாற்றம்

அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவில் நிலைபெறும் என்று...

சி.பி. ரத்நாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் 16 ஆம்...

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...