எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டின் பதிவு 48 மணித்தியாலங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பதிவு செய்வதில் இடையூறு ஏற்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.
எவ்வாறாயினும், உரிய பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர் மீண்டும் QR குறியீட்டில் பதிவு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.