சஜித்திற்கு ஆதரவு : தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவிப்பு!

Date:

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அதரவளிப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது.

தற்போது இடம்பெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்து வரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இதனை தெரிவித்தார்.

“தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழுவின் ஏகோபித்த தீர்மானத்திற்கு அமைய இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எமது ஆதரவையும் பூரண பங்களிப்பையும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்குவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது அரசியல் குழுவின் முடிவின்படி, ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம்.”

ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய காங்கிரஸ்
மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் காலநிலை மாற்றம்

அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவில் நிலைபெறும் என்று...

சி.பி. ரத்நாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் 16 ஆம்...

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...