குழப்பத்தில் முடிந்த ஜனாதிபதியின் 13வது திருத்தம் குறித்த பேச்சு

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (09) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து தேசத்தின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வகையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை தெரிவித்தார்.

இதனை அடைவதற்கு பரந்த மற்றும் திறந்த மனதுடன் கலந்துரையாடல் மூலம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

மேலும் ஜனாதிபதி தெரிவித்ததாவது,

மாகாண சபைகள் தொடர்பான புதிய சட்டங்களை உருவாக்கி மாகாண சபை வாக்களிப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய ஜனாதிபதி தயாராகி வருவதுடன், மாகாண சபைகள் செயற்படும் வரை மாகாண ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான ஆலோசனைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

சட்டம் இயற்றுவதற்காக மற்றுமொரு குழுவை நியமிக்க ஜனாதிபதி முன்மொழிந்தார், மேலும் அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் எதிர்க்கும் பாரம்பரியக் கண்ணோட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் விலகிச் செல்ல வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

விசுவாசமாகவும் பொறுப்புடனும் இருப்பதன் முக்கியத்துவத்தையும், இந்தப் புதிய அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதன் மூலம் புதிய திசைக்கான கூட்டு முயற்சியில் நாட்டின் அபிவிருத்தி தங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

ஜனாதிபதியின் உரையின் பின் கருத்து தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 13வது திருத்தம் குறித்து செயற்படுவதற்கு முன்  மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் மாத்திரமல்ல சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்தும் செயற்படுமாறு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

13வது திருத்தம் குறித்து பேசி  பாராளுமன்றில் முழுமையான குழப்பத்தை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளதாகவும் தீர்வு கிடைக்க வாய்ப்பு இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தற்போது பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என ரத்தின தேரர் கூறினார். இறுதியில் 13வது திருத்தம் குறித்த பேச்சு குழப்ப நிலையில் முடிந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...