இன்று முதல் சஜித்துக்கு கஸ்ட காலம்

0
147

எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் இன்று முதல் சமகி ஜன பலவேக நாடாளுமன்றக் குழுவை காப்பாற்ற முடியாது என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

பேருவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“சஜித் பிரேமதாச இப்போது காலை முதல் இரவு வரை, இரவு முதல் காலை வரை தனது எம்.பி.க்கள் குழு ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதை எப்படி நிறுத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இன்று முதல் சமகி ஜன வேகவுக்கு நெருக்கடியான காலம் வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அமோக வெற்றி பெறுவார். தேசிய மக்கள் சக்தி அனுர அல்லது சஜபே சஜித் ஜனாதிபதியின் வெற்றியை தடுக்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here