ஏ9 வீதி மாங்குளம் விபத்தில் மூவர் பலி

Date:

ஏ9 வீதியில் மாங்குளம், பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறம் வேன் மோதியதில், லொறிக்கு முன்னால் இருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்பக்க லொறியின் சாரதி லொறியில் இருந்து கீழே இறங்கியதில் இரண்டு லொறிகள் மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான அவர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும் முன் இருக்கையில் பயணித்த நபரும் உயிரிழந்துள்ளனர்.

வேனில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

முல்லேரிய புதிய நகரம், வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடைய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் வேனில் பயணித்த மூன்று பெண்களும் லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

விபத்து தொடர்பில் வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...