ஏ9 வீதி மாங்குளம் விபத்தில் மூவர் பலி

Date:

ஏ9 வீதியில் மாங்குளம், பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறம் வேன் மோதியதில், லொறிக்கு முன்னால் இருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்பக்க லொறியின் சாரதி லொறியில் இருந்து கீழே இறங்கியதில் இரண்டு லொறிகள் மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான அவர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும் முன் இருக்கையில் பயணித்த நபரும் உயிரிழந்துள்ளனர்.

வேனில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

முல்லேரிய புதிய நகரம், வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடைய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் வேனில் பயணித்த மூன்று பெண்களும் லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

விபத்து தொடர்பில் வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...