சினோபெக் குறைந்த விலையில் எரிபொருள் விற்பனையை தொடங்கவுள்ளது – அமைச்சர் தகவல்

Date:

செப்டெம்பர் 20 ஆம் திகதி முதல் சினோபெக் தனது சொந்த வர்த்தக நாமத்தின் கீழ் இயங்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.

“இன்று காலை நிலவரப்படி, அவர்களின் 150 பிரிப்பான்களில் 109 உடன் நிரப்பி முடிந்துவிட்டதாக SINOPEC தெரிவித்துள்ளது. இன்று மாலையின் முடிவில் அது சுமார் 115 ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த வாரத்திற்குள் 150ஐ முடித்துவிடுவார்கள் என்று நம்புகிறார்கள்.

அனைத்து விநியோகஸ்தர்களுடனும் தங்கள் பிராண்டின் கீழ் வணிகத்தைத் தொடங்குவதற்கு அவர்கள் முன்பதிவு செய்த திகதி செப்டம்பர் 20 என்று எங்களுக்குத் தெரிவித்தனர்.

மேலும், சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் எரிபொருளின் அதிகபட்ச விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...