சினோபெக் குறைந்த விலையில் எரிபொருள் விற்பனையை தொடங்கவுள்ளது – அமைச்சர் தகவல்

Date:

செப்டெம்பர் 20 ஆம் திகதி முதல் சினோபெக் தனது சொந்த வர்த்தக நாமத்தின் கீழ் இயங்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.

“இன்று காலை நிலவரப்படி, அவர்களின் 150 பிரிப்பான்களில் 109 உடன் நிரப்பி முடிந்துவிட்டதாக SINOPEC தெரிவித்துள்ளது. இன்று மாலையின் முடிவில் அது சுமார் 115 ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த வாரத்திற்குள் 150ஐ முடித்துவிடுவார்கள் என்று நம்புகிறார்கள்.

அனைத்து விநியோகஸ்தர்களுடனும் தங்கள் பிராண்டின் கீழ் வணிகத்தைத் தொடங்குவதற்கு அவர்கள் முன்பதிவு செய்த திகதி செப்டம்பர் 20 என்று எங்களுக்குத் தெரிவித்தனர்.

மேலும், சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் எரிபொருளின் அதிகபட்ச விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு

களுத்துறை - ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய்...

ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 9 பேர் பலி

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள்...

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தடை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி...

ஹர்ஷவை ஏமாற்ற நினைத்த அரசாங்கம்!

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி...