செப்டெம்பர் 20 ஆம் திகதி முதல் சினோபெக் தனது சொந்த வர்த்தக நாமத்தின் கீழ் இயங்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.
“இன்று காலை நிலவரப்படி, அவர்களின் 150 பிரிப்பான்களில் 109 உடன் நிரப்பி முடிந்துவிட்டதாக SINOPEC தெரிவித்துள்ளது. இன்று மாலையின் முடிவில் அது சுமார் 115 ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த வாரத்திற்குள் 150ஐ முடித்துவிடுவார்கள் என்று நம்புகிறார்கள்.
அனைத்து விநியோகஸ்தர்களுடனும் தங்கள் பிராண்டின் கீழ் வணிகத்தைத் தொடங்குவதற்கு அவர்கள் முன்பதிவு செய்த திகதி செப்டம்பர் 20 என்று எங்களுக்குத் தெரிவித்தனர்.
மேலும், சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் எரிபொருளின் அதிகபட்ச விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.