5 கோடி பெறுமதி கேரள கஞ்சா மீட்பு

0
318

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, வத்தளை, பங்களாவத்த பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 309 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன், கேரள கஞ்சா கையிருப்பின் மதிப்பு 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் வாடகைக்கு எடுத்த வீட்டின் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here