அமைச்சர் கெஹலியவை பதவி விலகக் கோரி பொது மக்கள் கையொப்பம்

0
42

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை தொகுதி அமைப்பாளர் அஜித்.பி பெரேராவின் ஏற்பாட்டில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான மக்கள் கையொப்ப சேகரிப்பு இன்று (18) களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

முறையான சுகாதார சேவையை ஏற்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், தற்போதைய சுகாதார சேவையிலிருந்தும் தற்போதைய சுகாதார அமைச்சர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்வதற்கு பொருத்தமான ஒருவருக்கு சுகாதார அமைச்சர் பதவியை வழங்குமாறு வற்புறுத்தி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை போதனா வைத்தியசாலையில் மருந்துகளை பெற்றுக் கொள்வதற்காக வந்த பெருந்தொகையான நோயாளர்கள் மற்றும் பிரதான வீதியில் பயணிக்கும் மக்களும் இந்த கையெழுத்துப் பத்திரத்தில் கையொப்பமிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here