போதை கடத்தல், பாதாள குழு உறுப்பினர்களுக்கான எச்சரிக்கை

Date:

அனைத்து வகையான போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு தனித்துவமான, பாரிய நடவடிக்கையை முன்னெடுக்க பாதுகாப்புப் படையினர் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் வர்த்தகம் முதல் பாரிய போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல் முதல் கொலை வரையிலான பாதாள உலகச் செயற்பாடுகள் தற்போது அமோகமாக இடம்பெற்று சமூகப் பேரழிவை நோக்கித் தள்ளுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் மறைந்திருந்து இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் சர்வதேச ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் ஏற்கனவே ஏராளமான தகவல்களை சேகரித்துவிட்டதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...

இஷாரா செவ்வந்தி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி...

அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி

பத்தேகம கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், ஐக்கியமக்கள்சக்தி...