மீண்டும் பொலிஸ் கடமையில் ஷானி

Date:

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, தற்போது ஓய்வு பெறும் வயதை நிறைவு செய்துள்ள ஷானி மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டு ஓய்வு பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான ஷானி அபேசேகரவுக்கு நீதி வழங்குவதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவின் தலையீட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அவரது ஓய்வூதியம் கூட பறிக்கப்பட்டது.

இதேவேளை, ஷானி அபேசேகர மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பணிக்கு வருவார் என பல தரப்பினர் மிகவும் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையில் 20 கிலோ அரிசி!!

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி...

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது…!

-போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய நபர் ஒருவர்...

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...