மீண்டும் பொலிஸ் கடமையில் ஷானி

Date:

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, தற்போது ஓய்வு பெறும் வயதை நிறைவு செய்துள்ள ஷானி மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டு ஓய்வு பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான ஷானி அபேசேகரவுக்கு நீதி வழங்குவதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவின் தலையீட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அவரது ஓய்வூதியம் கூட பறிக்கப்பட்டது.

இதேவேளை, ஷானி அபேசேகர மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பணிக்கு வருவார் என பல தரப்பினர் மிகவும் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உயிர் அச்சுறுதல்! துப்பாக்கி கேட்கும் அர்ச்சுனா எம்பி

வெளிநாட்டுத் தயாரிப்பான “ஸ்பிரே கண்’ (pepper spray) துப்பாக்கியை தமது தற்பாதுகாப்புக்காக...

பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணை மீள ஆரம்பம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு...

லயன் அறைகளில் வாழும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுங்கள் – சஜித் பிரேமதாச

நாட்டின் தேசிய தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அன்னளவாக...

சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26...