மீண்டும் பொலிஸ் கடமையில் ஷானி

Date:

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, தற்போது ஓய்வு பெறும் வயதை நிறைவு செய்துள்ள ஷானி மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டு ஓய்வு பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான ஷானி அபேசேகரவுக்கு நீதி வழங்குவதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவின் தலையீட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அவரது ஓய்வூதியம் கூட பறிக்கப்பட்டது.

இதேவேளை, ஷானி அபேசேகர மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பணிக்கு வருவார் என பல தரப்பினர் மிகவும் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...