ரணிலை இன்று நீதிமன்றில் முன்னிலைபடுத்துவது சிரமம்

Date:

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏதேனும் வன்முறை ஏற்பட்டாலோ அல்லது சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராகவோ சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாரால் அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு அமைதியின்மைக்கும் விரைவாக பதிலளிக்க கலகத் தடுப்புப் படைகள் மற்றும் கூடுதல் பொலிஸ் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போதைய உடல்நிலை காரணமாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரா என்பது நிச்சயமற்றது என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிஹ தெரிவித்துள்ளார். மருத்துவ அறிக்கை சிறைச்சாலைத் திணைக்களத்திற்கு இன்னும் கிடைக்கவில்லை.

Zoom தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வந்தால், அது தொடர்பாக தேவையான வசதிகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...