பாராளுமன்ற பெண் பொலிஸ் அதிகாரியின் தங்க நகைகள் திருட்டு

Date:

நாடாளுமன்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் வைத்து சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நெக்லஸ் மற்றும் இரண்டு தங்க மோதிரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது.

தனது தங்க நெக்லஸ் மற்றும் இரண்டு மோதிரங்களை எங்கோ அகற்றிக் கொண்டிருந்த போது யாரோ ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக அதிகாரியின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருடப்பட்ட தங்க நெக்லஸ் மற்றும் இரண்டு மோதிரங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக, அந்த தனி வீட்டில் உள்ள ஒன்பது பெண் பொலீசார், வரவழைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சிந்தக அனுராதாவிடம் நாம் வினவிய போது, ​​சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடரும் என தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...