பாராளுமன்ற பெண் பொலிஸ் அதிகாரியின் தங்க நகைகள் திருட்டு

Date:

நாடாளுமன்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் வைத்து சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நெக்லஸ் மற்றும் இரண்டு தங்க மோதிரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது.

தனது தங்க நெக்லஸ் மற்றும் இரண்டு மோதிரங்களை எங்கோ அகற்றிக் கொண்டிருந்த போது யாரோ ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக அதிகாரியின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருடப்பட்ட தங்க நெக்லஸ் மற்றும் இரண்டு மோதிரங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக, அந்த தனி வீட்டில் உள்ள ஒன்பது பெண் பொலீசார், வரவழைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சிந்தக அனுராதாவிடம் நாம் வினவிய போது, ​​சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடரும் என தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...