மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பதவி விலகியது, நிலக்கரி கொள்முதல் மோசடியை மக்கள் மனதில் இருந்து மறைக்க மேற்கொள்ளப்பட்ட கண் மூடும் நடவடிக்கையாகும் என்று சமகி ஜன பலவேகய (SJB) இன்று (18) வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இந்த மோசடிக்கு முழு அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த மோசடிக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமகி ஜன பலவேகய (SJB) தெரிவித்துள்ளது.
