EPF/ETF கொள்ளையை நிறுத்து!

Date:

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர்களின் சேமலாப நிதியின் முதலீடுகளுக்கு வழங்கப்படும் வட்டி சதவீதத்தை குறைப்பதற்கு எதிராகவும், அநீதியான வரிவிதிப்பு மற்றும் பிற கோஷங்களை எதிர்த்தும் இன்று (ஆகஸ்ட் 28) கூட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது.

பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்தி பிற்பகல் கொழும்பு கோட்டையில் தொழிற்சங்கங்கள், சிவில் அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட வெகுஜன அமைப்புக்கள், அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் ஒன்றிணைந்தனர்.

“EPF/ETF கொள்ளையை நிறுத்து! ஏன் கோஷமிட்டு சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல தயாரான போது, பொலிஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் அதே பொலிசார் தலையிட்டதால் ஊர்வலம் நிறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் பொலிஸார், கலகத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

அந்த இடத்தில் நீர் பீரங்கி ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்காக கொழும்பில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் 24 பேர் கொழும்பில் பல இடங்களுக்கு பிரவேசிக்க தடைவிதித்து நீதிமன்ற உத்தரவும் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...