EPF/ETF கொள்ளையை நிறுத்து!

Date:

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர்களின் சேமலாப நிதியின் முதலீடுகளுக்கு வழங்கப்படும் வட்டி சதவீதத்தை குறைப்பதற்கு எதிராகவும், அநீதியான வரிவிதிப்பு மற்றும் பிற கோஷங்களை எதிர்த்தும் இன்று (ஆகஸ்ட் 28) கூட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது.

பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்தி பிற்பகல் கொழும்பு கோட்டையில் தொழிற்சங்கங்கள், சிவில் அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட வெகுஜன அமைப்புக்கள், அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் ஒன்றிணைந்தனர்.

“EPF/ETF கொள்ளையை நிறுத்து! ஏன் கோஷமிட்டு சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல தயாரான போது, பொலிஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் அதே பொலிசார் தலையிட்டதால் ஊர்வலம் நிறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் பொலிஸார், கலகத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

அந்த இடத்தில் நீர் பீரங்கி ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்காக கொழும்பில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் 24 பேர் கொழும்பில் பல இடங்களுக்கு பிரவேசிக்க தடைவிதித்து நீதிமன்ற உத்தரவும் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...