விமான நிலைய அதிகாரிகள் கண்ணில் மண் தூவி தப்பித்த யாழ். நபர் மும்பையில் கைது

0
211

நீதிமன்ற உத்தரவின் பேரில் விதிக்கப்பட்ட பயணத் தடையையும் மீறி நாட்டை விட்டு தப்பியோடிய நபர் ஒருவர் விமானத்தில் தடுத்து வைக்கப்பட்டு மும்பையில் தரையிறங்கிய பின்னர் நாடு கடத்தப்பட்டார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபரை நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதவான்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், செவ்வாய்கிழமை (29) இரவு அவர் புறப்படும் முனையத்தின் ஊடாக பதுங்கியிருந்து மும்பை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறியுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டரில் அனுமதிக்காக காத்திருந்த அவுஸ்திரேலிய பெண் ஒருவர், அந்த கவுண்டரின் வழியாக பயணி ஒருவர் திருட்டுத்தனமாக செல்வதை அவதானித்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்த ஆஸ்திரேலியப் பெண்ணுடன் அதிகாரிகள் அவரைத் தேடினர் ஆனால் பலனில்லை. பின்னர், சிசிடிவி பதிவுகளில் இருந்து பயணியை அடையாளம் கண்டு, அவரது பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் கார்டின் கணினி மயமாக்கப்பட்ட விவரங்களை ஆய்வு செய்தனர், அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பயணத் தடையின் கீழ் சந்தேகத்திற்குரியவர் என்பதைக் கண்டறிந்தனர்.

விமானம் ஏற்கனவே இந்திய வான்வெளிக்குள் நுழைந்ததால், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் குறிப்பிட்ட பயணி குறித்து மும்பை விமான நிலையத்தில் உள்ள விமானி மற்றும் செயல்பாட்டு மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here