பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் – சுசில் பிரேம்ஜயந்த்

Date:

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

பிள்ளைகளின் போஷாக்கு நிலையை உயர்த்துவது தொடர்பில், தான் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாடசாலை மதிய உணவின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்க அரசாங்கம் உலர் உணவுகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. அமெரிக்காவினால் வழங்கப்பட்ட இந்த உணவுப்பொருட்கள் தொடர்பில் நேற்று சில ஊடகங்கள் தெரிவித்துள்ள உண்மைக்குப் புறம்பான விடயங்கள் குறித்து அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

´பிள்ளைகள் பாடசாலைக்கு வரும்போது, அவர்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை என்றால், அது ஒரு பிரச்சனை. பிச்சை எடுத்தாவது இந்நாட்டின் குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியுமானால் அதை நான் செய்வேன். சில பாடசாலைகளில் குழந்தைகளுக்கு இந்த மதிய உணவு வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால் இத்திட்டம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.´ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...