மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த T56 துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக பொலீசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்து மாளிகாவத்தை பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.