பிடிகல தல்கஸ்வல பிரதேசத்தில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு!

Date:

பிடிகல தல்கஸ்வல பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தல்கஸ்வ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள நகருக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த நபரை பாழடைந்த பிரதேசத்தில் மறைந்திருந்த நபர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இவர் சிகிச்சைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வட்டிக்கு பணம் கொடுப்பதாகவும், இது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிட்டகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

மீண்டும் காலநிலை மாற்றம்

அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவில் நிலைபெறும் என்று...