சர்வதேச நாணய நிதியத்தின் புதிய அறிவிப்பு

Date:

எதிர்வரும் டிசம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் நிதி உதவியை இலங்கை அரசாங்கம் பெறும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், டிசம்பரில் பெறப்படும் முதல் நிதி உதவி சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள 3 பில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியிருந்தது.

நீண்ட இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் ஊழியர் மட்ட உடன்படிக்கை செய்து கொண்டது.

இதன்படி, நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் வெளியிட்டது.

இது நான்கு வருட வேலைத்திட்டத்திற்கு உட்பட்டு இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட கடன் வசதியாக வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...