சஜித் – ரணில் ஒன்றிணைவு சாத்தியமில்லை ; நளின் பண்டார

Date:

அரசாங்கத்தினால் பரப்பப்படுகின்ற வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒன்றிணைய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“.. சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகி வருகின்றது.

இதனை அறிந்து ரணில் விக்ரமசிங்கவின் உதவியாளர்கள், ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைய வேண்டும் என கூறுகின்றனர்.

இது நடைபெறாத ஒரு விடயமாகும். இவ்வாறான கருத்துக்களுக்கு பொது மக்கள் ஏமாற்றமடையக் கூடாது.

2019ஆம் ஆண்டு சஜித் பிரேமதாசவின் வெற்றியை முறியடித்த ராஜபக்ஷ தரப்பினருடன் இணைந்துள்ள தரப்பினரே இன்று இவ்வாறான கருத்துக்களை முன்வைகின்றனர்..” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேசிய மக்கள் சக்தியினர் சமூகவலைத்தளங்களின் செயற்பாடுகளுக்காகக் கடந்த 3 வருடங்களில் 3 பில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...