ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து சமூக ஜனநாயகத்திற்கான பொதுவான பயணத்தை மேற்கொள்ளும் நோக்கில் கைகோர்த்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று (04) இந்த சந்திப்பு இடம்பெற்றது.
குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அசங்க நவரத்ன, கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் வெற்றி பெற்று பாராளுமன்றம் நுழைந்தார்.