வெற்றியின் பின்னர் அதிரடி நடவடிக்கை – அனுரகுமார

Date:

தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற பின்னர் விரைவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் கூறுகிறார்.

ஜா-எல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“எமக்கு வெற்றி கிடைத்தால் ஆரம்பத்திலேயே பாராளுமன்றம் கலைக்கப்படும்.

அப்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த பாராளுமன்றம் நியமிக்கப்படும் வரை அமைச்சரவைக்கு என்ன நடக்கும் என சிலர் கேட்கின்றனர்.

கவலைப்பட வேண்டாம். நாம் அரசியலமைப்பு ரீதியாக நாட்டை ஆள்வோம். இதற்கிடையில் ஒரு விடயம் என்னவென்றால், நான் ஜனாதிபதியாகும்போது, ​​​​ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி காலியாக இருக்கும், அதற்கு ஒருவர் வரலாம்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருடன் நானும் நான்கு பேர். 4 பேர் அடங்கிய அமைச்சரவை அமைக்கப்படும்.

அது சாத்தியமில்லை என்றால், அனைத்தையும் வர்த்தமானியின் ஊடாக ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரலாம்.

இந்த பாராளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்கினர் அடுத்த பாராளுமன்றத்தில் இருக்க மாட்டார்கள் என்பதை இங்கு உறுதிப்பட கூறுகிறேன்” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...