மதுபானசாலைக்கான அனுமதி விவகாரம்: உண்மையை ஒப்புக் கொண்டார் அங்கஜன்

Date:

”மதுபான சாலைகளுக்கான அனுமதியினை தனது தந்தைபுதிதாக பெறவில்லை எனவும், இருந்த அனுமதியினை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கும் முகமாக வழங்கிய ஆவணங்களே அவை எனவும் ” நாடளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

மதுபானசாலைக்கான அனுமதி விவகாரம் குறித்து யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எனது அப்பா ஒரு தொழிலதிபர். நான் அரசியலுக்கு வர முன்னரே தொழிலதிபராக இருக்கிறார். 70 ஆண்டுகளில் இருந்து அவர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கொழும்பில் 92ஆம் ஆண்டு காலங்களில் மதுபான சாலை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் அவரிடம் சில மதுபான சாலைகளின் அனுமதிகள் இருந்தன. அவற்றினை புதுப்பிக்கும் நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டார். புதிதாக அனுமதி பெறவில்லை.

எங்களுக்கு புதிதாக யாரும் தர வேண்டிய தேவை இல்லை. எனது அப்பாவிடம் அனுமதிகள் ஏற்கனவே இருந்தன. அப்பா மீது குற்றம் சாட்டிய நபருக்கும் தெரியும் எனது அப்பாவிடம் மதுபான சாலைகளுக்கான அனுமதிகள் இருக்கின்றன என்ற விடயம். தெரிந்தே அவர் குற்றம் சாட்டியுள்ளார் ”இவ்வாறு அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...