ரணிலின் ஆட்சிதான் மலையகத்துக்குப் பொற்காலம்!

Date:

“நல்லாட்சியின்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிதான் மலையக மக்களுக்கு பொற்காலமாக அமைந்தது. தற்போதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புரட்சிகரமான திட்டங்களை முன்னெடுக்கின்றார். எனவே, அவரை நாம் நிச்சயம் வெற்றி பெற வைக்க வேண்டும்.”

  • இவ்வாறு இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

ஹப்புத்தளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வடிவேல் சுரேஷ் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மலையக மக்களுக்கு வாக்குறுதி பெற்றுத் தந்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதை மக்கள் மறக்கக்கூடாது. மலையக மக்களின் வீட்டுத் திட்டங்கள், சுவசெரிய அம்புலன்ஸ் சேவை, கல்வியல் கல்லூரிகள் என்று பல சேவைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்திருக்கின்றார். 1700 ரூபா சம்பள அதிகரிப்பையும் ஜனாதிபதி உறுதி செய்வார் என்று நம்புகின்றோம்.

மலையகத்தின் தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒன்றிணைத்துள்ளார். எனவே, நன்றிக்கடன் செலுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே வாக்களிப்போம்.

அன்று கொன்று தள்ளிய தோட்ட அதிகாரிகளையும், தீயிட்டுக் கொளுத்திய தொழிற்சாலைகளையும், மக்களின் அடையாள அட்டைகளையும் அவர்களால் பெற்றுத்தர முடியுமா?” – என்றும் வடிவேல் சுரேஷ் வினவினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...