Tuesday, September 24, 2024

Latest Posts

இறுதி அஞ்சலி செலுத்த பிரித்தானியா செல்கிறார் ஜனாதிபதி ரணில்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இதன்படி ஜனாதிபதி அடுத்த வார இறுதியில் இங்கிலாந்து செல்ல உள்ளார்.

இப்போதும் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டில் இது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

மகாராணியின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதற்கு முன்னர் ஐக்கிய இராச்சியத்திற்குச் செல்லவுள்ளார்.

அங்கு 03 நாட்கள் தங்கியிருக்கும் ஜனாதிபதி, பிரித்தானிய அரசாங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் குழுவையும் சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்பவுள்ளார்.

19ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.