தபால் வாக்கு – இன்று இறுதி நாள்

0
115

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்குகளை இறுதியாக இன்று (12) வழங்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, தபால்மூல வாக்களிக்கத் தகுதி பெற்று ஆனால் செப்டம்பர் 4, 05, 06 மற்றும் 11 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கினைப் பதிவு செய்ய முடியாத அனைத்து அரச ஊழியர்களும் இன்று தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும்.

தங்களின் பணியிடம் அமைந்துள்ள மாவட்ட செயலாளர் அலுவலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று தபால் வாக்குகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்றும் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்த முடியாத பட்சத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்காகப் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு வேறு திகதி வழங்கப்படாது, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ஆம் திகதி வாக்களிக்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here