தபால் வாக்கு – இன்று இறுதி நாள்

Date:

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்குகளை இறுதியாக இன்று (12) வழங்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, தபால்மூல வாக்களிக்கத் தகுதி பெற்று ஆனால் செப்டம்பர் 4, 05, 06 மற்றும் 11 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கினைப் பதிவு செய்ய முடியாத அனைத்து அரச ஊழியர்களும் இன்று தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும்.

தங்களின் பணியிடம் அமைந்துள்ள மாவட்ட செயலாளர் அலுவலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று தபால் வாக்குகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்றும் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்த முடியாத பட்சத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்காகப் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு வேறு திகதி வழங்கப்படாது, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ஆம் திகதி வாக்களிக்க முடியாது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...