இந்திய துணை ஜனாதிபதி பதவி பிரமாண நிகழ்வில் செந்தில் தொண்டமான் பங்கேற்றார்!

0
516

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச பொது சேவை குழு (PSI) கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இன்று பொறுப்பேற்கும் சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவி பிரமாண நிகழ்வில், இந்திய ஜனாதிபதி செயலகத்தின் அழைப்பின் பேரில் கலந்துகொண்டார்.

சி.பி.ராதாகிருஷ்ணன், புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி மூர்மு முன்னிலையில் இன்று பதவியேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here