சஜித் தலைமையில் ஆட்சியை பொறுப்பேற்க தயார்

Date:

ஐக்கிய மக்கள் சக்தி எந்த நேரத்திலும் தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும், நாட்டின் பொறுப்பை ஏற்க சஜித் பிரேமதாச தலைமையில் தயாராக இருப்பதாகவும் அதன் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

நாட்டின் ஒவ்வொரு தேர்தல் பிரிவுகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டங்களை நடத்தி முடித்துள்ளதாகவும், தனது கட்சி எந்த நேரத்திலும் தேர்தலுக்கு தயாராகும் எனவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவ ஊக்குவிப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறை மாவட்டத்தில் “வெற்றி வெற்றி” எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைப்பாளர்களும் இணைந்து கட்சியின் கிளைச் சங்கங்கள், மகளிர் சங்கங்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களை நிறுவும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் இந்த வேலைத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் எனவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...