Monday, September 25, 2023

Latest Posts

ரயில் தொழிற்சங்க நடவடிக்கை

அனைத்து மார்க்கங்களிலும் பல ரயில் சேவைகளை இரத்து செய்ய நேரிடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்வே சாரதிகள் சிலர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறுந்தூர ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் சில அலுவலக ரயில்களும் இரத்துச் செய்யப்படலாம் என்பதுடன், சேவையில் ஈடுபடும் அனைத்து ரயில்களும் தாமதமடையலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பின் ரயில்வே ஊழியர்கள் சிலர் நேற்று(11) நள்ளிரவு 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

ஆட்சேர்ப்பு மற்றும் சேவை ஓய்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.