Tuesday, September 24, 2024

Latest Posts

டொலர் இன்றி மூன்று எரிபொருள் கப்பல்கள் துறைமுகத்தில்

கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பலும், டீசலை ஏற்றிய இரண்டு கப்பல்களும் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன.

கச்சா எண்ணெய் கப்பல் துறைமுகத்திற்கு வந்து 03 வாரங்கள் கடந்துள்ள நிலையில் இரண்டு டீசல் கப்பல்களும் 02 வாரங்களுக்கு முன்னர் வந்துள்ளன.

ஆனால், இதுவரை தரையிறங்கும் பணி துவங்கவில்லை.

கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளுக்கு செலுத்துவதற்கு டொலர்கள் இல்லாததே காரணம் என்று பெற்ரோலிய கூட்டுத்தாபனம் கூறுகிறது.

கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளை செலுத்துவதற்கு டொலர்களை ஒதுக்குவது தொடர்பில் மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.