பிரபல போதைப்பொருள் வர்த்தகர் கைது

Date:

போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான கணேமுல்லை சஞ்சீவ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு திரும்பிய போதே அவர் கைது செய்யப்பட்டதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர் நேபாளம் – காத்மாண்டுவில் இருந்து கட்டுநாயக்கவிற்கு போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.கடவுச்சீட்டில் ‘சேனாதிரகே கருணாரத்ன’ என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது.

எனினும், கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் தொடர்ச்சியான விசாரணைகளுக்கு அமைய அவர் கணேமுல்லை சஞ்சீவ என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அடுத்ததாக விசேட பொலிஸ் குழுவிடம் ஒப்படைக்கப்படுவார் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...