மிகுதி 350 ரூபாவையும் இ.தொ.காவே பெற்றுக் கொடுக்கும் – செந்தில் தொண்டமான்

Date:

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா சம்பள உயர்வை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ள சூழலில் அதற்கான வர்த்தமானி பிரதியை களுத்துறையில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு களுத்துறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதே அவர் இதனை வெளியிட்டுள்ளார்.

”1350 ரூபா சம்பள உயர்வை இ.தொ.கா பெற்றுக்கொடுத்துள்ளது. விரைவில் 350 ரூபா கொடுப்பனவையும் பெற்றுக்கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ள உள்ளது. அதனை பெற்றுக்கொடுப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். 1350 ரூபா சம்பளத்தை விமர்சிப்பவர்கள் எஞ்சியுள்ள 350 ரூபாவை பெற்றுக்கொடுக்க முற்பட்டால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க இ.தொ.கா தயாராக உள்ளது எனவும், அதனை விமர்சிப்பவர்கள் பெற்றுக்கொடுக்காமல் மௌனம் காக்கும் பட்சத்தில் அதனை இ.தொ.கா பெற்றுக் கொடுக்கும் என்றும் செந்தில் தொண்டமான் இந்த பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 அக்டோபரில் இலங்கைக்கு...

300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் கைது

ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால்...

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...