இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை 7000 ஆக அதிகரித்துள்ளதாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை காட்டு யானைகளின் எண்ணிக்கை 5600 ஆக காணப்பட்ட நிலையில், அண்மை நாட்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளில் நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 7000 என அதிகரித்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
காட்டு யானைகள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்வதால், அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.