அமெரிக்கா விடுத்துள்ள அவசர எச்சரிக்கை – தேர்தலுக்கு முன்னும் பின்னும் இலங்கையில் அமைதியின்மை ஏற்படலாம்!

Date:

இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு இலங்கை தயாராகி வரும் நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க பிரஜைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்னும் பின்னும் எதிர்ப்புகள் எதிர்பார்க்கப்படுவதால், இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகள் பாரிய ஒன்றுக் கூடல்களை தவிர்க்க வேண்டும்.

அத்துடன், அமைதியான பேரணிகள் கூட வன்முறையாக மாறக்கூடிய நிலைமைகள் உருவாகலாம்.” என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...

ரம்புக்கனையில் மண்சரிவு

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக...

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு

சமீபத்திய கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த சாலைகள், பாலங்கள் மற்றும் பாதுகாப்பற்ற...