எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காகப் பணம் ஒதுக்கப்பட்டால் மக்களுக்குத் தேவையான பெற்றோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பிலேயே விரைவில் தேர்தல் வருமா என சிலர் கேட்கின்றனர், ஆனால் முதலில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும், தேர்தலுக்கு தேவையான பணத்தை கண்டுபிடிக்க வேண்டும், அதன் பிறகு எந்த தேர்தலையும் நடத்தலாம் என வஜிர மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஒத்திவைப்பு மற்றும் ஏனைய விளையாட்டுகள் குறித்து வஜிர இதற்கு முன்பு பலமுறை முயற்சித்தார். எனவே வஜிர இம்முறையும் அவ்வாறே செய்வாரா என்பது அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுள்ளது.
வஜிர முன்பு சொன்ன சில கதைகள் பின்னர் உண்மையாகிவிட்டன. இந்த வருட ஆரம்பத்தில் நடைபெறுவதாக கூறப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல் இதுவரை நடைபெறவில்லை.
அதனால்தான் வஜிர மீண்டும் பணமில்லை என்ற இந்தக் கதையைக் கூறி மக்களைக் குழப்புகிறார், அல்லது உண்மையில் ஓட்டுக்குப் பணம் ஒதுக்கப்படுகிறதா என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.