கொழும்பில் பாரிய தீ – விமான படையும் களத்தில்

Date:

கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில்   தெருவில் உள்ள கடைத் தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டுக்கடங்காமல் தீ பரவி வருவதால் விமானப்படை வரவழைக்கப்பட்டுள்ளதுடன் விமானப்படை விமானம் ஒன்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

அத்துடன் தீ பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் மற்றும் முப்படையினர் அறிவித்துள்ளனர். 

முதலாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள இலத்திரனியல் கடைத்தொகுதியே முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது. 

ஆறு வர்த்தக நிலையங்களுக்கு தற்போதும் தீ பரவிக் கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எட்டிற்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் வருகை தந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

செந்தில் தொண்டமானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின்!

நேபாளத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது, தன்னுயிரை பொருட்படுத்தாது, பலரின் உயிரை காப்பாற்றிய...

ஒரு தந்தையின் மரணம் கற்பித்த பாடம்!

செப்டம்பர் 18, 2025 அன்று சுரங்க வெல்லலகேயின் மரணம், இலங்கை கிரிக்கெட்டில்...

தமிழக – நீலகிரி தோட்ட தொழிலார்கள் விடயத்தில் செந்தில் தொண்டமான் கூடுதல் கரிசனை

இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், இ.தொ.கா தலைவர்...

இலங்கையின் கடன் மதிப்பீடு CCC+/C தரத்துக்கு உயர்வு

சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான S&P Global Ratings, இலங்கையின் நீண்ட...