கொழும்பில் பாரிய தீ – விமான படையும் களத்தில்

Date:

கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில்   தெருவில் உள்ள கடைத் தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டுக்கடங்காமல் தீ பரவி வருவதால் விமானப்படை வரவழைக்கப்பட்டுள்ளதுடன் விமானப்படை விமானம் ஒன்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

அத்துடன் தீ பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் மற்றும் முப்படையினர் அறிவித்துள்ளனர். 

முதலாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள இலத்திரனியல் கடைத்தொகுதியே முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது. 

ஆறு வர்த்தக நிலையங்களுக்கு தற்போதும் தீ பரவிக் கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எட்டிற்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் வருகை தந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...